பாதையெங்கும் விரவிக் கிடக்கும் சரக்கொன்றை பூக்களை வலிக்கும் மனதோடு கூட்டிக்கூட்டிக் குவிக்கிறார் துப்பறவுப் பணியாளர் சின்னச்சின்ன இடைவெளிகளில் புதிது புதிதாய் தோன்றுகின்றன மஞ்சள் பூக் குன்றங்கள். சன்னமாய் வீசும் காற்றில் கலைந்து பறக்கின்றன கோபுரங்களின் தங்கக் கலசங்கள். சிலிர்த்து உதிர்க்கிறது மரம் மேலும் பல கொன்றைகளை தரையெங்கும் பணியாளர் தலை மீதும்.
-- சுரேஷ் பரதன்.