இங்கே என்னுடைய நேற்றைய, இன்றைய கவிதைகளை உங்கள் பார்வைக்கு தருகிறேன். குறை , நிறைகளிருப்பின் கருத்துக்களை பதியுங்கள்.
உறவுகளின் அருகாமையின்மையும்
தொலைபேசியின் அழைப்பு மணியின்
நெடுங்கால மௌனமும்
அந்தகார பெருஞ்சுழிக்குள்
அழுத்திவிடுகின்றன ...
ட்விட்ஸ் இல்லாமல் கழிகின்றன
இருபத்தியொரு நாட்கள்... !
ஓட்டுக்குள் சுருங்கின
நத்தையாய் நகர்கின்றது
வாழ்க்கை ... !