Tuesday, April 8, 2008

கற்பிதங்கள்



கர்ப்பத்திலிருந்தே தொடங்குகின்றன
நமக்கான கற்பிதங்கள் .....
பிரகலாத போதங்களும்
அபிமன்யு அற்புதங்களும்...!
நாம் கொண்ட கற்பிதங்களும்
துன்பங்களின் முடிவோடு...!
சுயமாய் என்ன கற்றுக் கொண்டோம்
கற்றுத் தருவதற்கு ... ?
வேட்டையாடவும் ...
வேட்டையாடப் படாமலும்
இருப்பதற்கே
எல்லா கற்பிதங்களும் ..
கற்பிதங்களின் விளைவுகளெல்லாம் ..
“ சர்வம் தர்க்கம் மயம்” !

No comments: