Tuesday, April 8, 2008

நீ ... நான் ... மௌனம் ...


உனக்கும் எனக்கும்
மத்தியில் நிற்கும்
மௌனக் கோட்டை
தகர்த்து
எப்பொழுது என்னை
முழுமையாக
ஆட்கொள்ளப் போகிறாய் ... ?

மனம் அறுத்துப் போகும்
மௌனம் தவிர்த்து
பொய்யாய் கொண்ட
முகத்திரை களைந்து ...
நிஜங்களை எப்பொழுது
நிதர்சனமாக்கப் போகிறாய் ... ?

பதில் தெரியாத
கேள்விகளின்
இருள்மையில் மூழ்கும் நம்மை
நமது மௌனம் ...
சாளர ஓட்டை
நிலவொளியாய்
காத்து நிற்கட்டும் ... !
அதற்காகவேணும் நாம்
மௌனம் கொண்டாடலாம் !

No comments: