Thursday, April 3, 2008

ஜாடி


அடியில் நீராய்
மனதில் ஆசை ..!
கண்கள் வீச்சில்
கற்கள் போட
காதல் பொங்கி
நிறைந்த வேளை
தாகம் தீர்ந்த
காகமாய் அவள்....
கண்ணீர் மிஞ்சிய
ஜாடியாய் நான்.
(பி.கு: 1991-ஆம் ஆண்டு எரிதழல் என்ற கையெழுத்துப் பிரதியில் வெளியான என் கவிதை. இந்த கையெழுத்துப் பிரதி திருநெல்வேலி, வண்ணார்பேட்டை கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், திரு. ப.கிருபாகரன் அவர்கள் ஆசிரியராக இருந்து மாதந்தோறும் வெளியிடப்பட்டது.)

1 comment:

Unknown said...

Suresh

Even after these many years this poem seems to be still fresh and reveals that era of poems with a slice of pain.

Thanks & Good luck

- Kirubakaran