பசித்த நேரத்தில்
மட்டுமே வந்து போகும்
நாத்திக பக்தர்களுக்கு
இரத்தின கம்பளம்
விரித்து வரவேற்கும்
கோயில்கள்.
கஷ்டம் தெரிந்தும்
கூடலை இரந்து
கருவைப் பெற்ற
கர்ப்பப்பைகள்.
பிறந்தவன்
நர(க) அசுரன்
என்று தெரிந்திருந்தும்
பூரித்துப் போகும்
பூமா தேவிகள்.!
கிழித்த இடத்தில்
வழிந்த இரத்தம்
விழியில் பட்டு
சிவந்து போனால்
சிம்மாசனம் தூளெனப்
புரிந்த ஊசி
விழியோடு இமையைத்
தைத்த போதும்
சுகித்துக் கொண்டிருக்கும்
சுக போகிகள்.
கண்ணைத் தைத்தவன்
கடவுள் என்று
கோயில் கட்டும்
பெரிய சோழர்கள்!
No comments:
Post a Comment