Tuesday, July 15, 2008

ஏழை பாரதி

காக்கைக் குருவி எங்கள் ஜாதியடி
பாரதியைக் கற்றுத் தந்தாள் – அந்தப்
பள்ளி ஆசிரியை.
ஏனோ புரியவில்லை
ஏழைச் சிறுவனுக்கு.
விட்டுவிட்டு வீட்டிற்க்கு
வந்தான்
பசித்து வந்தவனுக்கோ
பரிமாறப் பட்டதென்னவோ
பருக்கைகள் மட்டுமே!
புரிந்து கொண்டான் அவன் பாரதியை!
உண்ணும் அளவு ஒன்று
என்பதினால் தானோ அன்று
பாரதி சொன்னான்
காக்கைக் குருவி எங்கள் ஜாதியென்று.!

No comments: