Tuesday, August 19, 2008

கவிதை வேதம்.

புவி பார்த்து விழி புணரும்;
மனதில் நுழைந்து கருவாய் தங்கும்;
உயிரின் வாசல் கவிதை பிரசவிக்கும்;
புவி கேட்டு பரவச மடையும்;
கவிதை புரியாதோர் கல்வி யிலாதோர்;
அகம் புரியாது புறம் பேசும்
அகந்தை கொண்ட அறிவிலி மாந்தர்
மனதில் அறைய பிறந்த கவிதை
உலகம் பேச உன்னதம் ஆகும்;
வரி வடிவில் வாழ்ந்து நிற்கும்;
வானம் வந்து வாழ்த்திச் செல்லும்;
வாழ்க்கை வந்து வழக்கை சொல்லும்
பேனா நிமிர்ந்து தீர்ப்பை எழுதும்;
அகந்தை தாங்கும் அறிவிலிக் கூட்டம்
வார்த்தை முன்னே வலு விழக்கும்;
வார்த்தை முன்னே வலு விழந்தோர்
வாழ்க்கை முன்னா நிற்கக் கூடும்.. ?
தீர்ப்பைச் சொல்லும் சிறந்த கவிதை
அரசில் ஏறி ஆட்சி செய்யும்;
செவ்வேல் தாங்கி இராட்சசம் அழிக்கும்;
மனிதம் சிறக்க சிலுவை சுமக்கும்;
குற்றம் தவிர்க்கும் குரானாய் நிற்கும்;
கவிதை புரியும் செந்நிலை அரசில்
மதங்க ளில்லை குலங்க ளில்லை;
மானுடம் மட்டும் மகத்துவ மாகும்;
மானுடம் வாழ வாழ்ந்திடும் கவிதை
நாளைய உலகின் வேதம் வேதம்!

No comments: