Saturday, March 15, 2008

என் கவிதை ....

வாழ்க்கை தன்
வழக்குகளால்
என் சிறகழிக்கும்...
உள்ளேற்றி வைத்த
அக்னிக் குஞ்சு
தன் பங்காய் என்னை
எரித்தொழிக்கும்....
இருப்பினும் ....
எரிந்து விழுந்த
என் சாம்பலிலிருந்தும்
மீண்டும் பிறக்கும்
ஃபீனிக்ஸ் பறவையாய்
என் கவிதை .....

No comments: