Saturday, March 15, 2008

ஞானம் பிறந்த கதை .....

ஒளியும் ஒளியின்மையுமான
பெருவெளியில்
அதனதன் தன்மை நிறுத்து...
காலம் நிறுத்து ...
அதன் தொடர்பாய் ....
வாழ்க்கை வரையறுத்த
வழக்குகள் வலிகொடுக்க...
இனங்கள் பெருக்கி...
பெருக்கிய இனங்கள் மேய்த்து .....
மேய்த்த இனங்களுக்கு
மேய்க்கவும் ... மேய்க்கப் படவும் ...
கற்றுத் தந்து ...
போதமைகளின் நிலையாமையும்
போதங்களின் போதமின்மையும்
இருப்பை கிழிக்க .....
கந்தல் வாழ்க்கை வாழக் காரணம் தேட ....

ஆறாம் அறிவு அட்டர் வேஸ்ட்.

No comments: