Tuesday, March 18, 2008

வாழ்க்கை

கவிதைக்காய்க் காத்திருந்து
கற்பனைகள் பல செய்து
காகிதத்தில் விதையூன்ற ...

வரிகளுக்கும் வார்த்தைகளுக்குமான
சண்டையில்
நவீன ஓவியமாகிப் போயிற்று...

பார்த்தவன் சொல்லிப் போனான்
அழகான கவிதையாய்
ஓவியமாகியிருக்கிறதென ....

வெறுத்துப் போய்
நிரந்தர ஓவியனானேன்.

No comments: