Sunday, May 18, 2008

விடை தருகிறேன்

எனக்கென்று நீயும்
உனக்கென்று நானுமாய்
நமக்கு நாமாய்
வகுத்துக் கொண்ட
வாழ்க்கைப் பாதையில்
நீ மட்டும் ஏன்
வழுக்கிப் போய்விட்டாய் ... ?

என் சோகத்தை
என் முகத்தில் பூத்த முட்களும்
பேனா சிந்திய இரத்தங்களுமே
பிரதிபலிக்கின்றனவேயன்றி
உதடுகள்
உச்சரித்ததில்லை .. !
உன் பதிலின்றி
பார்வையின்றி
பூத்து குலுங்க வேண்டிய
இந்த மலர்
முகாரிச் சோகத்திற்குள்
முகம் புதைத்துக் கொண்டிருக்கிறது..!

ஒருமுறை வந்து
முகம் காட்டிவிட்டுப் போ!
உன் கண்கள் குளத்தில்
கவிதை முத்தெடுத்து
காதலோடு தொடுத்து
என் சோகத்திற்குக்
கொடுத்துவிட்டு
என்னை பிரிய
விடை தருகிறேன்!

No comments: